உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து புதிய நீதிபதிகள் நியமனம்

உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 ஜூன் 1 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு :

பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஷீல் நகு, மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஸ்ரீ சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு & காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மூத்த வழக்கறிஞர், திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனாவும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை ஏற்கும் நாளிலிருந்து இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *